Udhaisri Kavidhaigal

Friday, September 21, 2018

த000041- ஆண் - கவிதை - உதய்ஸ்ரீ

                                                                      ஆண்
21/9/18
கவிதை - உதய்ஸ்ரீ 

அதிவீர சக்தியவன்
அகிலத்தை ஆண்டிடுவான்
பராக்கிரம சாலியவன்
பாசத்தில் பணித்திடுவான்
வீரியத்தில் வித்தகனவன்
வியங்கொண்டால் வீழ்த்திடுவான்

கோபுரத்து கோட்டையவன்
கோலவிரலுக்கோ கோமாளியவன்
கொஞ்சுவதில் பொய்கையவன்
கோமதிக்கோ கணவனவன்
ஆகாயத்து கூடவன்
குறிஞ்சிக்கோ வேலியவன்

தாய்க்கோ பிள்ளையவன்
தாரத்துக்கோ தலைவனவன்
சொந்தத்துக்கோ தூண் அவன்
சோர்ந்து விட்டால் பச்சிளம் குழந்தையவன்
விழிப்போரில் தோற்றிடுவான்
வில்போரில் வென்றிடுவான்

சலிக்காது உழைத்திடுவான்
சலனப்பட்டால் சரிந்திடுவான்
சமூகத்தின் கவசம் அவன்
சந்தனத்தின் வாசமவன்
பெண்மையின் நாதமவன்
தோழனுக்கோ தோள்லவன்

சிவனின் தோன்றலவன்
கொடியிடைக்கோ கூத்தனவன்
மதுரைக்கோ மணிமண்டபமவன்
மார்புடை மன்னனவன்
மதுவுக்கோ மலைப்பாம்பு அவன்
மையிட்டு கண்ணுக்கோ காமனவன்

குடும்பத்தின்  அச்சாணியவன்
ஆலமரத்தின் வேர் அவன்
அடக்கி ஆள்வதில் ஆகாயமவன்
சதுரங்க ஆட்டத்தின் புள்ளியவன்
மகளுக்கோ வள்ளள்ளவன்
எல்லோரையும் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் ஆண் அவன்...

நன்றி 
உதய்ஸ்ரீ 

Tuesday, September 18, 2018

த000040 - எனைவிட்டு செல்லும் பனியே -கவிதை- உதய்ஸ்ரீ

                                           எனைவிட்டு செல்லும் பனியே

கவிதை- உதய்ஸ்ரீ 

சிறுதுளிபனியென்மேல் படர்குளிர் உணரும்முன்னே
வியந்தகு சூரியன்னுன்னை, வியங்கொண்டே அழைத்ததும்மேனோ,

பனி நனை புல்தளிர் மேலே, பசும் தழை நுகர்ந்துண்ணும் வண்டு
உன் முகம்தனில் முகம்தனை புதைத்தே சிறுநடை மெல்ல பயிலும்வேளை, சிறுநொடியில் மறைவதும்மேனோ சிறுவண்டு தவிப்பதும் முறையோ,

முதிர்நல்முகசுருக்கத்தோடே, நடை தளர்ந்தன்னமேனியோடும்
சிறுஇடை கட்டிய கச்சை சுருள்முடியுடன் சுருண்டே அசைய
என் நுனிவிரல் உனைத்தொட்டு இரசிக்கும் வேளை
எனைவிட்டு இமையம் செல்ல கானல் நீராய்  மறைவதும் முறையோ,

பிறை நல் நெற்றியுடனே உயர்நல் தமிழைக்கொண்டே
பிறைதேய்ந்து இருளும்முன்னே  உனைக்கான ஓடியேவருவேன்,
உன் விழிகொள்ளும் இளம்வெயில்போலே,உன் இமை தூஞ்சு முன்னே நானும்,
உன் கருவிழி அசைவில்நாளும்   மையல் கொண்டே காதல்  துளிர்த்திடுவேனே.

நன்றி 

உதய்ஸ்ரீ 

Friday, September 14, 2018

த000039 - காதலியின் சிரிப்பு - கவிதை : உதய்ஸ்ரீ


                                                               காதலியின்  சிரிப்பு
கவிதை : உதய்ஸ்ரீ


சிரிப்பில் பலவிதம் உண்டு உன்
சிரிப்பில்மட்டும்தான் கள்ளங்கபடமற்ற
தூய்மை தட்டுப்படுகின்றன, அது எப்படி ?
காந்தள் மலர்கள் தங்கள் இதழ்களை
விரித்தாற்போன்றே உன் சிரிப்பின் மெல்லிய
ஒலி என் காதுகளில் இனிமையை கூட்டுகின்றன,
உடல் அழுக்காறுகளை களைத்தெறியும் நீரின் சல சலப்பு
ஓசைபோல் உன் சிரிப்பின் ஓசை என் மயிரிழைகளை சிலிர்க்க செய்கின்றன,
மூங்கில் காடுகளில் நுழைந்து திரியும் வண்டுகளின்
சிறகுகள் மூங்கிலில் பட்டு தெறித்து சிதறும் ஓசைபோல்
என் மனக்கதவை திணறடிக்கச்செய்யும் உன் சிரிப்பின் ஒலி !
என் காவிய பைங்கிளியே உன் சிரிப்பொலியை என்
இதய பெட்டகத்துள் புதைத்து வைத்துள்ளேன் அவை
என்றும் என்னை விட்டு நீங்காது என்றும் என்னிதய துடிப்பின் ஓசைபோல்....

நன்றி
உதய்ஸ்ரீ

Tuesday, September 11, 2018

த000038- மண் பார்த்த என் விழி -கவிதை : உதய்ஸ்ரீ

                                                 மண்  பார்த்த என் விழி 


கவிதை : உதய்ஸ்ரீ 

வர்ணனை :

வின்  தொட்டுயர்ந்த அழகிய மலை குன்றுகளில் படர்ந்து வளர்ந்த பச்சிளம்தளிர்களை வயிறார உண்டுகளித்து பருத்து வளர்ந்த உயர்தர பசுக்களின் சாணத்தால் நெருப்பூட்டிய
கொல்லனது பலம்பொருந்திய தோளினது வலிமைகொண்டே உலையிலிட்டு உருக்கியே செய்த செம்மைபொருந்திய  கூர் வேலைக்கொண்டே ஆயிரம் யானைகளின் தலைகளை ஒருநொடியில்  வெட்டி சாய்க்கும் மதுரை மாநகரத்து வேந்தனது நெஞ்சிக்கூட்டை நேருக்கு நேர் சந்திக்க முடியாது புறமுதுகிட்டு ஓடும் வேற்றுவனது உறையிலிட்ட வாள்போல் என்கண்கள் உனைக்காண அஞ்சி மண்ணை பார்க்கின்றன.

நன்றி 
உதய்ஸ்ரீ

Friday, September 7, 2018

த000037 - விடுகதை - உதய்ஸ்ரீ

                                விடுகதை
  1.               வண்ணத்தில் பிறப்பது எது ?
  2.               எண்ணத்தில்  பிறப்பது எது ?
  3.               வார்த்தையில் பிறப்பது எது ?
  4.              ஒலியில் பிறப்பது எது ?
  5.             அன்பில் பிறப்பது எது ?
  6.             கருணையில் பிறப்பது எது ?
  7.             கைபட்டால் உடையும் கண்ணாடி எது ?
  8.            பெண்ணுக்கு அழகு எது ?
  9.            முக்காடு போட்டாலும் முகம்மதை காட்டுவான் யார் ?
  10.         ஒருபிடி ஜான் ஆனாலும் அவனின்றி இயங்காது எது ?
  11.             கண்ணுக்கு எட்டாத துரமானாலும் எண்ணத்தில் பிரதிபலிப்பான் யார் ?

                 12        கைகால் இருந்தும் நடமாட தெரியாதவன் மழைவெயிலுக்கு                     ஒதுங்கமாட்டா நட்டவனுக்கு நன்றியுடனே காவல்காப்பன் யார் ?
  13 கைக்குள் அடங்காதவன் விரலுக்குள் அடங்கி போவான் யார் ?
            
                விடை :
  1.                                           ஒலி
  2.                                       ஓவியம்
  3.                                         காதல்
  4.                                         கொடை
  5.                                        நீர் குமிழ்
  6.                                    புன்னகை
  7.                                      நிலவு
  8.                                      கற்பனை
  9.                                   சோளக்காட்டு பொம்மை
  10. .                                   மோதிரம்
  11. .                                 காவியம்
  12. .                                 இதயம்
  13. .                                  நாதம்
  14.                                             நன்றி : உதய்ஸ்ரீ