மலரிடம் காதல் கொண்ட
கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ
மலரே நீ தான் எத்தனை எத்தனை அழகு உன்னை கண்டு காதல் வயப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேரோ
அவர்களில் உன்னுடைய மனதை
கொள்ளை கொண்டவர்கள் எத்தனை பேரோ,
நீ உன்னுடைய ஆடைகளை உதிர்த்து
மண் மீது புரள விடும் போதும் அழகு,
வெயிலில் காய்ந்து சருகுகளாய் மண்ணில் உதிரும்
போதும் அழகு ,
காற்றில் சல சல வென்று மண்ணில் புரண்டு ஓடும் போதும்
அழகு,
மழையில் நனைந்து இதழ்கள் விரியும் போதும் அழகு
,
மண்ணில் புதைந்து மக்கி உரமாகும் போதோ நீ பேரழகு
,
பெண்களின் விறல் இடுக்குகளில்
சிக்கி திணறி நாரில் இழுபட்டு
வலித்தாலும் சிரித்த முகத்துடனே
வளைந்து நெளிந்து
மாலையாய் மாறும்போதோ நீ அழகோ
அழகு ,
கடவுளின் கழுத்தில் மாலையாய்
நீ புரளும் போதோ
பார்க்கும் பக்தர்கள் கண்களுக்கு
எல்லாம் அது ஓர் ஆனந்த அழகு ,
உன்னை கூந்தலில் அள்ளி முடித்த
மனையாளை அள்ளி அணைக்க
அத்துடன் உன்னையும் சேர்த்தே
அள்ளி அணைத்து - உன்
உணுச்சி முகர்ந்து அவள் உச்சம்
தொட எங்கும் - உன் பேரழகு,