Udhaisri Kavidhaigal

Monday, August 31, 2026

தலைப்பு இல்லா - தலைக்கனம் : நேபாள் - கவிதை : உதய்ஸ்ரீ

 

 

                                                    தலைப்பு இல்லா - தலைக்கனம்  : 

                                                                   நேபாள்

கவிதை : உதய்ஸ்ரீ 

 


என் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்துடனு சரியா, என்று தன்னுடைய ஆனந்த கனவை சுமந்தே ஊரெல்லாம் தன் கல்யாண பத்திரிகையை தந்து சுற்றம் நட்பை ஒருவன் அழைத்து வர,

கடவுளே நிறை மாத கர்ப்பிணி ஏ புள்ள நல்ல படியா தாய்யு புள்ளையு இருக்கானு என்று கடவுளின் முன் நின்று வேண்டி சென்ற பெண்மணி ஒருபுறம் நடந்து செல்ல ,

நீண்ட கொம்புகளை தரையில் ஊன்றியே ஆனந்த தாண்டவமாம் ஆனந்த ஈசனை ஆகாய மேனியனை கண்டா ஆனந்தத்துடன் மலை இறங்கும் சுற்றுலா பயணிகள் ஒரு புறம் நடந்து செல்ல ,

பகல் என்றும் பாராது தன்னுடைய புது மனைவியை கட்டி அணைத்தே ஆனந்த இன்பத்தில் திளைத்து இருக்கும் இருபத்தி ஆறு வயது நிரம்பியா ஆண் மகன் மயங்கி இன்புற ,

ஊர்விட்டு வெளிஊர் செல்பவரும் வெளிஊரில் இருந்து உள்ளூர் வருபவரும்மாக பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்ய ,

நேத்து எல்லா நல்லா தானையா சாப்பிட்ட இன்னைக்கு என்ன நட்டாத்துல விட்டுட்டு போவியான்னு தன்னுடைய மார்பில் அடித்து அழுது தீர்த்த அறுபது வயது நிரம்பியா தாய்யின் அழுகுரல் எங்கும் ஒலிக்க,

சிக்கிறோ வா யாராச்சு பாத்துடா போறாங்கன்னு தன்னுடைய காதலியின் கைகளை இருக்க பிடித்தே ஊரை விட்டே ஓடி கொண்டு இருக்கும் காதல் ஜோடிகள் ஒரு புறம் இருக்க,

ஆகாயத்தில் பட்டம் விட்டே ஆனந்தமாய் ஏய் ஏய் என்று ரீங்காரமாய் குரல் எழுப்பியே சின்னாஜ்சிறுவர்கள் மொட்டைமாடியில் விளையாடி மகிழ,

நாலு காசு குறைச்சி குடுத்தா என்ன குறைஞ்ச போய்டுவா கத்திரிக்கவா என்னமோ குதிரை வேல சொல்லுற என்றே காய் காரனிடம் பேரம் பேசி கால் கிலோ போடு என்றே சொல்லி மூணு முணுத்த படியே வாங்கி செல்லும் பெண்மணி ஒருபுறம் போக,

தூங்குடா கண்ணா அம்மா வேல பாக்கணுள்ள என்று தொட்டிலில் தன்னுடைய குழந்தையை கிடத்தி தாலாட்டி தூங்க வைக்கும் அழகிய தாயின் புன்முற்றுவாள் ஒருபுறம் மலர ,

குடுத்த காச திருப்பி குடுக்க வக்கில்லா நீ எல்லா எதுக்கு உசுரோட இருக்கானு தன்னுடைய உமிழ்நீரை தரையில் துப்பிவிட்டே ஒருவன் செல்ல அவன் கூறிய வார்த்தையில் நிலைகுலைந்து நா எல்லா எதுக்கு உசுரோட இருக்க எனக்கு சாவு வாராதான்னு தன்னை தானே நொந்து கொள்ளும் குடும்பம் ஒருபுறம் இருக்க,

புருசனோட இருக்கும் பொது சொகமாலா இருந்துச்சி இப்போ இந்த வழிய கூட தாங்கிக்க முடியாம இந்த கத்து கத்துற மூச்சா நல்லா இழுத்து விடு அஞ்சி நிமிசத்துல உ புள்ள பொறந்துடுவா, ம்ம் ,என்றே பிரசவ வழியில் துடிக்கும் பெண்ணை எட் நர்ஸ் கத்த,

ஊர் எல்லையில் காவல் செய்யும் இராணுவ வீரர்கள் இதற்கும் அதற்குமாய் நடக்க

டேய் ஒடுங்க டா ஒடுங்கடா என்ற குரல் எங்கிருந்தோ ஒலிக்க ஒருசில நொடியில் தின்று தீர்த்தது அத்துணை பெரையும் பெருவெள்ளம் நேபாளத்தில் .

கனவுகளை அள்ளிச்சென்ற கருணையற்ற கட்டுக்கடங்கா ஆறு, உணர்வுகளை உருகுலைத்த பெருவெள்ளம், இதன் தலைக்கனத்தால் தலைப்பு இன்றி மண்ணில் புதையுண்ட நேபாள் .

Monday, June 15, 2026

கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 

                                 கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 


           கள்வெறி கொள்ளுதடா உந்தன் கட்டழகு  கவிதை கண்டு,

          பித்தானாகி  அலைகின்றேனே  என்னை பிரிந்தே நீ எங்கு சென்றாய்,

          பட்டங்கள் பல படித்தும் நீயேன் பட்டினியாய் கிடந்தாய்,

          சட்டங்கள் ஆழுவதற்கு உன்போல் ஜகத்தினில் யாரும் இல்லை,

         உன்னை நினைக்கையிலே என்னெஞ்சு வேகுதடா,

         ஊரார் உன்னை புகழ்ந்தால் என்னெஞ்சு பெருமிதம் கொள்ளுதடா,

        காத்து கிடக்கின்றேன் நித்தம் காதலால் தேய்கிறேன்

        மாற்றும் மனம்மின்றி உன்மேல் மதிகெட்டு அழைக்கின்றேன்

       உன் கவிதை வாழும் வரை என் காதலும் அதனுடனே பயணிக்கும்,

     என் ஜீவன் உள்ள வரை என் கவிதைகளும் உன்னுடனே பயணிக்கும்.  

Wednesday, June 3, 2026

கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ

 

                                         கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ 

 


கவிதைக்கு இருப்பா !

அவன் : உன் கவிதை பூக்களை அப்படியே வைத்து விடாதே, அவை வாடி விட போகிறது என்றான் அவளிடம். 

அவள் : அவளோ  அவை வாடும் பூக்கள் இல்லை,  வாழும் பூக்கள்  என்றாள். 

கவிதைக்கு இறப்பேது !

அவன் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  கவிதை பூக்களாய் மலர கண்டேன் அது எப்படி? என்றான்.

அவள் : கவிதை பூக்கள், வார்த்தை ஜாலங்களை தன்னகத்தே கொண்டதல்லவா எனவேதான் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது ! 

அவன் :பாறையில் பூ மலரும் என்பதை அறிவேன் உணர்வுகள் கவிதை பூவாய் மலருமா ?அது எப்படி என்றான்.

அவள் : உள் உணர்வுகளை, கற்பனை என்னும் கவிதையால் தட்டி எழுப்பும், அதுவே காதல் என்னும் கவிதை பூக்கள் என்றாள்.

கவிதைக்கு இறப்பேது !

அவன் : என் அறிவுக்கு வித்திட்ட வித்தகியே நீ விதைக்கும் விதை மட்டும் எப்படி கவிதை பூக்களாய்  மலர் கின்றன ! என்றான்.

அவள்:  ஒரு விதை விதைத்தால் ஆயிரம் மலர்கள் மலர்வது இல்லையா ! கற்பனைக்கு எல்லை ஏது, ஆகாயத்துக்கு முடிவேது,  கவிதைக்கு வரம்பேது, காதலுக்கு நிறம் மேது, என்றாள் அவள். 

கவிதைக்கு இறப்பேது !

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ

 

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ


மலரே நீ தான் எத்தனை எத்தனை அழகு உன்னை கண்டு காதல் வயப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேரோ

அவர்களில் உன்னுடைய மனதை கொள்ளை கொண்டவர்கள் எத்தனை பேரோ, 

நீ உன்னுடைய ஆடைகளை உதிர்த்து மண் மீது புரள விடும் போதும் அழகு,

வெயிலில் காய்ந்து சருகுகளாய் மண்ணில் உதிரும் போதும் அழகு ,

காற்றில் சல சல வென்று மண்ணில் புரண்டு ஓடும் போதும் அழகு,

மழையில் நனைந்து இதழ்கள் விரியும் போதும் அழகு ,

மண்ணில் புதைந்து மக்கி உரமாகும் போதோ நீ பேரழகு ,   

பெண்களின் விறல் இடுக்குகளில் சிக்கி திணறி நாரில் இழுபட்டு

வலித்தாலும் சிரித்த முகத்துடனே வளைந்து நெளிந்து 

மாலையாய் மாறும்போதோ நீ அழகோ அழகு , 

கடவுளின் கழுத்தில் மாலையாய் நீ புரளும் போதோ

பார்க்கும் பக்தர்கள் கண்களுக்கு எல்லாம் அது ஓர் ஆனந்த அழகு , 

உன்னை கூந்தலில் அள்ளி முடித்த மனையாளை அள்ளி அணைக்க

அத்துடன் உன்னையும் சேர்த்தே அள்ளி அணைத்து - உன்

உணுச்சி முகர்ந்து அவள் உச்சம் தொட எங்கும் - உன் பேரழகு,

Monday, June 1, 2026

உ : வரிசை : உண்மை ஊமையாய் இங்கே : கவிதை : உதய்ஸ்ரீ

 

 

பிறந்த நேரம் : 6.30   

  கவிதை : உதய்ஸ்ரீ                         : வரிசைஉண்மை ஊமையாய் இங்கே :

 


உலை தீயில் உருகி உருகி

உலை தீயும் உருகுதடா

உத்தமன் தான் எங்கு சென்றான்

உண்மை எங்கோ மறைத்ததடா

உற்பத்தி பெருகியதடா

உற்று பார்க்க மறந்ததடா

உற்றார் பெற்றார் - என்ற

உறவுகளும் போனதடா 

உலகம் இன்னும் ஏனோ சுழலுதட

உண்மை ஊமையாய் இங்கே

Sunday, May 31, 2026

ஈ வரிசை : ஈசனும் இதை பொறுப்பானோ : கவிதை : உதய்ஸ்ரீ

 

                  வரிசை :  ஈசனும் இதை பொறுப்பானோ

கவிதை பிறந்த நாள் : 15|2|13

நேரம் : 5.20 pm

கவிதை : உதய்ஸ்ரீ



ஈன்ற தாயை

ஈட்டியால் குத்து கின்றாய்

ஈம சடங்கு வரையும்  விட்டு வைப்பது இல்லை

ஈக்களாய்  மொய்க்கும் மனித  கூட்டம்

 ஈவு இரக்கம் இல்லாமல் நடக்கின்றன

ஈடு  இணை இல்லா இந்த உலகத்தை 

ஈர்த்து தந்த தாயையும் எவரும் 

 ஈன்ற மட்டும் விடுவது இல்லை

ஈசனும் இதை பொறுப்பானோ

Friday, May 29, 2026

இந்த நாய்களுக்கு பெயர் "நல்லவன்"

 

                                         இந்த நாய்களுக்கு பெயர் நல்லவன் :

                                                                         கவிதை : உதய்ஸ்ரீ 

 

 





பஸ், ரயில் நிலையம், அலுவலகம், என்று ஆங்காங்கே இந்த இரவு உண்ணிகள்  இருக்கத்தான் செய்கின்றன.

 பொது இடங்களில் பட்ட பகலில் தெருக்களில் முச்சந்தியில் தன் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் தெரு நாய்கள் கூட  தன்னுடன் உறவு கொள்ளும் பெண் நாய்களின் விருப்பம் பெற்றே உறவு கொள்ளும்,

பொது இடங்களில் தன்னுடைய இச்சைகளை தீது கொள்ள என்னும் இந்த கழிவறை புழுக்கள்லாகிய இவர்களை தண்டிப்பது எப்படி, ஒட்டு மொத்த ஆட்டு கூட்டத்தில் இந்த ஆட்டை அடையாளம் கண்டு பிடித்தாலும் இதை காட்டி குடுப்பது எப்படி…

படித்த பட்ட தாரி போல் வேஷம் போட்டு கொண்டு,  மிடுக்கான உடை அணிந்து கொண்டு, உதட்டில் பொய்யான புன்னகையை  தரித்து  கொண்டு, கண்களில் காமத்தை சுமந்து கொண்டு, தன் விரல் நகங்களில்  வெறியை அணிந்து கொண்டு, மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, எல்லோரிடமும் தன்னை நல்லவன் போல் காட்டி கொண்டு நல்லவன் என்று பெயர் எடுக்கும்,

“இந்த நாய்க்கு பெயர் நல்லவன்”

பெண்ணின் உடலை உரசுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிக்கும் இச்சைகள். இல்லை, இல்லை, ஏச்சைகள் என்றே இவர்களை சொல்லுவது சாலா சிறந்தது.

பெண்களின் உடல் அங்கங்களை அவர்களுக்கு தெரியாது என்று எண்ணி கொண்டு அவர்கள் உடலை உரசி, தன்னுடைய உடலை, சூடேற்றி கொள்ளும் நாதாரிகள் சில நல்லவள் வயிற்றிலும் பிறக்கத்தான் செய்கின்றன !