Udhaisri Kavidhaigal

Wednesday, June 3, 2026

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ

 

மலரிடம் காதல் கொண்ட கவிஞர் : கவிதை : உதய்ஸ்ரீ


மலரே நீ தான் எத்தனை எத்தனை அழகு உன்னை கண்டு காதல் வயப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேரோ

அவர்களில் உன்னுடைய மனதை கொள்ளை கொண்டவர்கள் எத்தனை பேரோ, 

நீ உன்னுடைய ஆடைகளை உதிர்த்து மண் மீது புரள விடும் போதும் அழகு,

வெயிலில் காய்ந்து சருகுகளாய் மண்ணில் உதிரும் போதும் அழகு ,

காற்றில் சல சல வென்று மண்ணில் புரண்டு ஓடும் போதும் அழகு,

மழையில் நனைந்து இதழ்கள் விரியும் போதும் அழகு ,

மண்ணில் புதைந்து மக்கி உரமாகும் போதோ நீ பேரழகு ,   

பெண்களின் விறல் இடுக்குகளில் சிக்கி திணறி நாரில் இழுபட்டு

வலித்தாலும் சிரித்த முகத்துடனே வளைந்து நெளிந்து 

மாலையாய் மாறும்போதோ நீ அழகோ அழகு , 

கடவுளின் கழுத்தில் மாலையாய் நீ புரளும் போதோ

பார்க்கும் பக்தர்கள் கண்களுக்கு எல்லாம் அது ஓர் ஆனந்த அழகு , 

உன்னை கூந்தலில் அள்ளி முடித்த மனையாளை அள்ளி அணைக்க

அத்துடன் உன்னையும் சேர்த்தே அள்ளி அணைத்து - உன்

உணுச்சி முகர்ந்து அவள் உச்சம் தொட எங்கும் - உன் பேரழகு,

Monday, June 1, 2026

உ : வரிசை : உண்மை ஊமையாய் இங்கே : கவிதை : உதய்ஸ்ரீ

 

 

பிறந்த நேரம் : 6.30   

  கவிதை : உதய்ஸ்ரீ                         : வரிசைஉண்மை ஊமையாய் இங்கே :

 


உலை தீயில் உருகி உருகி

உலை தீயும் உருகுதடா

உத்தமன் தான் எங்கு சென்றான்

உண்மை எங்கோ மறைத்ததடா

உற்பத்தி பெருகியதடா

உற்று பார்க்க மறந்ததடா

உற்றார் பெற்றார் - என்ற

உறவுகளும் போனதடா 

உலகம் இன்னும் ஏனோ சுழலுதட

உண்மை ஊமையாய் இங்கே

Sunday, May 31, 2026

ஈ வரிசை : ஈசனும் இதை பொறுப்பானோ : கவிதை : உதய்ஸ்ரீ

 

                  வரிசை :  ஈசனும் இதை பொறுப்பானோ

கவிதை பிறந்த நாள் : 15|2|13

நேரம் : 5.20 pm

கவிதை : உதய்ஸ்ரீ



ஈன்ற தாயை

ஈட்டியால் குத்து கின்றாய்

ஈம சடங்கு வரையும்  விட்டு வைப்பது இல்லை

ஈக்களாய்  மொய்க்கும் மனித  கூட்டம்

 ஈவு இரக்கம் இல்லாமல் நடக்கின்றன

ஈடு  இணை இல்லா இந்த உலகத்தை 

ஈர்த்து தந்த தாயையும் எவரும் 

 ஈன்ற மட்டும் விடுவது இல்லை

ஈசனும் இதை பொறுப்பானோ

Friday, May 29, 2026

இந்த நாய்களுக்கு பெயர் "நல்லவன்"

 

                                         இந்த நாய்களுக்கு பெயர் நல்லவன் :

                                                                         கவிதை : உதய்ஸ்ரீ 

 

 





பஸ், ரயில் நிலையம், அலுவலகம், என்று ஆங்காங்கே இந்த இரவு உண்ணிகள்  இருக்கத்தான் செய்கின்றன.

 பொது இடங்களில் பட்ட பகலில் தெருக்களில் முச்சந்தியில் தன் தாகத்தை தீர்த்துக்கொள்ளும் தெரு நாய்கள் கூட  தன்னுடன் உறவு கொள்ளும் பெண் நாய்களின் விருப்பம் பெற்றே உறவு கொள்ளும்,

பொது இடங்களில் தன்னுடைய இச்சைகளை தீது கொள்ள என்னும் இந்த கழிவறை புழுக்கள்லாகிய இவர்களை தண்டிப்பது எப்படி, ஒட்டு மொத்த ஆட்டு கூட்டத்தில் இந்த ஆட்டை அடையாளம் கண்டு பிடித்தாலும் இதை காட்டி குடுப்பது எப்படி…

படித்த பட்ட தாரி போல் வேஷம் போட்டு கொண்டு,  மிடுக்கான உடை அணிந்து கொண்டு, உதட்டில் பொய்யான புன்னகையை  தரித்து  கொண்டு, கண்களில் காமத்தை சுமந்து கொண்டு, தன் விரல் நகங்களில்  வெறியை அணிந்து கொண்டு, மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, எல்லோரிடமும் தன்னை நல்லவன் போல் காட்டி கொண்டு நல்லவன் என்று பெயர் எடுக்கும்,

“இந்த நாய்க்கு பெயர் நல்லவன்”

பெண்ணின் உடலை உரசுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிக்கும் இச்சைகள். இல்லை, இல்லை, ஏச்சைகள் என்றே இவர்களை சொல்லுவது சாலா சிறந்தது.

பெண்களின் உடல் அங்கங்களை அவர்களுக்கு தெரியாது என்று எண்ணி கொண்டு அவர்கள் உடலை உரசி, தன்னுடைய உடலை, சூடேற்றி கொள்ளும் நாதாரிகள் சில நல்லவள் வயிற்றிலும் பிறக்கத்தான் செய்கின்றன ! 

Sunday, May 24, 2026

 

                        பெற்ற மகள் கேட்டாள்

                              கவிதை : உதய்ஸ்ரீ


பெற்ற மகளோ என்ன செய்தாய் எனக்கு என்றாள் தாயிடம்

தாயோ அதை பட்டியலிட்டு சொல்ல முடியுமா என்றாள்,

உணவை  உதிரமாக்கி    தந்தேன் ,

தூக்கத்தை விடியலாக்கி  தந்தேன் ,

வலியை உரமாக்கி  தந்தேன்

எனக்கான வற்றை எல்லாம் உனதாக்கி தந்தேன் ,

வேர்வையின் சுமையை என் முதுகில் ஏற்றி,

உன்னை ஒய்யாரமாய் இருக்க செய்தேன்,

 நீ  "வேறொருவனிடம்  ஆனந்தமாய் கை கோர்த்து செல்ல

வேசியாய் நான் வேடம் தரித்து நின்றேன் 

நீ திருப்பி தருவாய் என்று நான் எதையும் தர வில்லை,

தந்தது போத வில்லையே என்று வெட்கி சாகிறேன்

இன்னும் தர என்னிடம் ஒன்றும் இல்லை என்று என்னும் போதெல்லாம்

மண்ணில் புதையுண்டு தன்னை தானே மாய்த்து கொள்கிறது மனம்

கவிதை : உதய்ஸ்ரீ

 

Monday, March 4, 2019

த000048 -ஒரு முறையேனும் உன்னை நீ பார் -உதய்ஸ்ரீ

ஒரு முறையேனும் உன்னை நீ பார் 

கவிதை ; உதய்ஸ்ரீ
அ :
அன்பாய் பேசி பழகிடு
அனைவருக்கு ஆறுதலாய் இருந்திடு
அரக்கனையும்  அன்பால் வென்றிடு
அறிவால் உலகை காத்திடு
அரவாணிகளையும் உன்னுள் இணைத்திடு
அடைக்கலமாய் நீயும் இருந்திடு
அடியவர்களுக்கு நீ  உதவி வந்தால்
அண்டங்களும் உன்னை வணங்கிடுமே

இ :
இயற்க்கையோடு ஒன்றி வாழநினை
இயற்கையை அழிக்க நினையாதே
இயன்றவரை போராடு
இமையம் வரை உயர்ந்திடுவாய்
இட்டதை எல்லாம் இழந்துவிட்டு
இல்லாததை தேடி ஓடாதே
இம்மை மறுமையை எண்ணி எண்ணி
இன்றைய வாழ்வை இழக்காதே
நன்றி
உதய்ஸ்ரீ

Saturday, February 2, 2019

த000047-சுகமான தருணங்கள் கவிதை :- உதய்ஸ்ரீ

                                   சுகமான தருணங்கள் 
கவிதை :- உதய்ஸ்ரீ

அவள் நினைவை நான் சுமக்கும்  ஒவ்வொரு தருணங்களும் சுகமானவையே ...
பரந்த மணல் பரப்பில் சுடுமணலில் பட்ட கால்கள் பொறிந்தாலும் விலகாத மனதுடனே அவளோடு கைகோர்த்து, உடைந்த செதில்களாய் அங்கும் இங்கும் தன் உடல் பாகங்களை உதிர்த்து அரைஉடளோடே காட்சி தரும் பழைய படகின் ஓர விளிம்பில் எங்கள் இருவரின் முதுகு தண்டையும் அதில் சாய்த்தே பேசிய  கதைகளை மீண்டும் மீண்டும் பேசி நேரம் ஏன் நகர்கிறதோ என்றெண்ணும் மனதோடு அவள் விரல்கள் என்னோடு இணைந்து எனை கடந்து  சென்ற அத் தருணம் சுகமான தருணங்களே ....

அவள் மடிதனில் இளைப்பாறி, அவள் விரல்  கொண்டே என்தலை கோதி என் உடலை தீமூட்டிய அத்தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சுகமான தருணங்களே,

மனம் ஆயிரம் பேசியும் வெளிவரும் ஒன்றிரண்டு வார்த்தையும் உடைபட்டு அவள் விரல்  முகர்ந்து எச்சில் பதித்த அத்தருணம்  நினைக்கும் போதெல்லாம் சுகமானதருணங்களே ,

முந்தைய கடந்து சென்ற கதையெல்லாம் பேசி பேசி அவள் சிரிக்க நான் ரசிக்க வரும் சுண்டல் தான் தவிர்த்து அவள் அசந்த நொடிப்பொழுதில் நான் தந்த முத்தம்தனை இரவெல்லாம் எண்ணி எண்ணி கண்விழித்த அத்தருணம் என்றும் சுகமானதருணங்களே ,

வெட்ட வெளியும் தனி அறையாய் காட்சிதந்து கண் மறைக்க, இருள் சூழ்ந்த நொடியென்றே எண்ணினான் செல்லமாய் கடித்து சிவந்த இடையில், முத்தாய் வேர்த்தொழுகும் வேர்வைதனை நான் துடைத்த அத்தருணம் எண்ணும்போதெல்லாம் சுகமான தருணங்களே,

கூடடைந்த கோழிக்குஞ்சி தாய்தந்த இறைதனை உண்ணாது தரை கொத்தி தரை கொத்தி அண்ணாந்து தாய்முகம்பார்த்தே ஓடி ஆடி சண்டையிட்டு தன் உடன் பிறந்த குஞ்சிகளோடே விளையாடி கழித்தாலும் தாயின் குரல் கேட்டு தாயின்  இடைபுகுந்து சூட்டை சுவாசித்து தன் முகம்புதைத்து மடி தூங்கும் குஞ்சிபோல் உன் சுவாசத்தில் நான் தூங்கும் நாள் என்றோ என்று  எண்ணி எண்ணியே காத்திருக்கும் இத்தருணம் என்றும் எனக்கு சுகமான தருணங்களே.
நன்றி
உதய்ஸ்ரீ