Udhaisri Kavidhaigal

Monday, June 15, 2026

கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 

                                 கவிஞர் பாரதி மேல் கொண்ட காதல் : கவிதை : உதய்ஸ்ரீ

 


           கள்வெறி கொள்ளுதடா உந்தன் கட்டழகு  கவிதை கண்டு,

          பித்தானாகி  அலைகின்றேனே  என்னை பிரிந்தே நீ எங்கு சென்றாய்,

          பட்டங்கள் பல படித்தும் நீயேன் பட்டினியாய் கிடந்தாய்,

          சட்டங்கள் ஆழுவதற்கு உன்போல் ஜகத்தினில் யாரும் இல்லை,

         உன்னை நினைக்கையிலே என்னெஞ்சு வேகுதடா,

         ஊரார் உன்னை புகழ்ந்தால் என்னெஞ்சு பெருமிதம் கொள்ளுதடா,

        காத்து கிடக்கின்றேன் நித்தம் காதலால் தேய்கிறேன்

        மாற்றும் மனம்மின்றி உன்மேல் மதிகெட்டு அழைக்கின்றேன்

       உன் கவிதை வாழும் வரை என் காதலும் அதனுடனே பயணிக்கும்,

     என் ஜீவன் உள்ள வரை என் கவிதைகளும் உன்னுடனே பயணிக்கும்.  

No comments:

Post a Comment