கவிதைக்கு இறப்பேது ! கவிதை : உதய்ஸ்ரீ
கவிதைக்கு இருப்பா !
அவன் : உன் கவிதை பூக்களை
அப்படியே வைத்து விடாதே, அவை வாடி விட போகிறது என்றான் அவளிடம்.
அவள் : அவளோ அவை வாடும் பூக்கள் இல்லை, வாழும் பூக்கள் என்றாள்.
கவிதைக்கு இறப்பேது !
அவன் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
கவிதை பூக்களாய் மலர கண்டேன் அது எப்படி? என்றான்.
அவள் : கவிதை பூக்கள், வார்த்தை
ஜாலங்களை தன்னகத்தே கொண்டதல்லவா எனவேதான் என்றாள்.
கவிதைக்கு இறப்பேது
!
அவன் :பாறையில் பூ மலரும்
என்பதை அறிவேன் உணர்வுகள் கவிதை பூவாய் மலருமா ?அது எப்படி என்றான்.
அவள் : உள் உணர்வுகளை, கற்பனை
என்னும் கவிதையால் தட்டி எழுப்பும், அதுவே காதல் என்னும் கவிதை பூக்கள் என்றாள்.
கவிதைக்கு இறப்பேது !
அவன் : என் அறிவுக்கு வித்திட்ட
வித்தகியே நீ விதைக்கும் விதை மட்டும் எப்படி கவிதை பூக்களாய் மலர் கின்றன ! என்றான்.
அவள்: ஒரு விதை விதைத்தால்
ஆயிரம் மலர்கள் மலர்வது இல்லையா ! கற்பனைக்கு எல்லை ஏது, ஆகாயத்துக்கு முடிவேது, கவிதைக்கு வரம்பேது, காதலுக்கு நிறம் மேது, என்றாள்
அவள்.
கவிதைக்கு இறப்பேது !
No comments:
Post a Comment