Udhaisri Kavidhaigal

Wednesday, November 29, 2017

த000023 - தடிமாடு - கவிதை - உதய்ஸ்ரீ

14/3/14
கவிதை - உதய்ஸ்ரீ 

                                              தடிமாடு, தடிமாடு...

உயிர் கொண்டு வீற்றிருக்கும் இச் சோலைகளில் தாரகைகளாய் பூத்துக்குலுங்கும் இப் பூங்கோதைகளின் வண்ணமிகு வாசம்தனை முகர்ந்தே நான் செல்ல, அவை இழுக்கும் இழுப்பில் அதனுடனே நான் சென்று சிறுமல்லி பூக்களை அள்ளியே நான் முகர்ந்து கொஞ்சிவிளையாடி மகிழ  எங்கிருந்தோ வந்த தென்றல் எனை அழைத்து சென்றிடவே அவ்வழி செல்லும் ஆற்றின் நீர்படுக்கை என் பாதம் தனை முத்தம்மிட,என்மடிதனில் இளைப்பாறி செல்லாயோ என்று மாமரத்தின் கிளைகள் அசைத்தே எனைப்பார்க்க அவை நிழல் கண்டு மயங்கியே அதன் மடியில் நானும் கண்ணுறங்க விண்ணுலகம் பறந்தேதான் நான்  விழித்திடும் நேரம்தனில் கருமேகம் எனை சூழ சுற்றும் படர்ந்த நிலஒளியில் அவள் முகம் கண்டே நான் மெய்சிலிர்க்க அவள் அருகே செல்ல மனம் துடித்தபோதிலும் செல்லாது அவள் விழிக்கான எண்ணி தடை கொண்டு நிற்கும் இலைதனை விலக்கியே மெல்ல நான் பார்க்க அவள் நிமிர " அரைத்து ஒரு கை.........ஆ !.............

எழுந்திடு எருமமாடே நேரோபோறது தெரியாம இன்னு தூக்கிட்டு கெடக்க தடிமாடு தடிமாடு  எழுந்துரு.........என்று என் அம்மா திட்ட கலைந்தது என் கனவு.


நன்றி 
உதய்ஸ்ரீ 

No comments:

Post a Comment